
Rtn.R.V.Harikrishnan
குடியாத்தம் ரோட்டரி சங்கத்தில் பல பொறுப்புகளை வகித்தார். 2017-18 ஆம் ஆண்டு சங்கத்தில் போலியோ பிளஸ் இயக்குநராக பொறுப்பு ஏற்று குடியாத்தம் முழுவதும் 41 இடங்களில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை நேரில் சென்று பார்வையிட்டு அங்கு தேவையான உதவிகளை செய்தார்.
2019-20 ஆம் ஆண்டு மாவட்ட பொங்கல் விழா பொருளாளராக சிறப்பாக செயல்பட்டார். கொரோனா தொற்று காலமான 2020-21 ஆம் ஆண்டில் குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் தலைவராக பொறுப்பு ஏற்று. உலகமே வீட்டுக்குள் முடங்கிய காலகட்டத்தில் இளைஞர் நற்பணி மன்ற நண்பர்கள் 55 பேர் உதவியுடன் குடியாத்தம் நகரின் பொது இடங்களில் மக்களுக்கு சேவையாற்றும் பணியினை தொடர்ச்சியாக செய்து வந்தார்.
கொரோனா தோற்றின் போது பல ஆயிரம் மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார். கொரோனா தடுப்பு ஊசி பெரும் தட்டுப்பாடுக்கு இடையிலும் தொடர்ச்சியாக 87 நாட்கள் கொரோனா தடுப்பு ஊசி முகாமை நடத்தி பல ஆயிரம் மக்கள் பயன் பெற உதவினார்.